tamilnadu

img

பதிலடி கொடுப்போம்!

சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

தேர்தல் பின்னடைவுகள் இடதுசாரிகளின் அவசியத்தையோ அல்லது மக்களுக்காக அவர்கள் குரல் எழுப்புவதற்கான திறனையோ எப்போதும் குறைத்துவிடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். தி இந்து பிசினஸ்லைன் நாளிதழின் செய்தியாளர் ஏ.எம்.ஜிகீஷ்க்கு அவர் அளித்த நேர்காணல்:

2014க்குப்பின் கடந்த ஐந்தாண்டுகளில்   இடதுசாரிகள் பல்வேறு இயக்கங்களை நடத்தி இருக்கிறார்கள். நரேந்திர மோடி அரசாங்கம், மாணவர்களுக்கு எதிராக. விவசாயிகளுக்கு எதிராக, கல்வியாளர்களுக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் எதிராக அநேகமாக இயக்கங்களை நடத்தி இருக்கிறார்கள். எனினும்,  அந்த எதிர்ப்புகளை வாக்குகளாக மாற்றுவதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். என்ன நடந்தது? மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் எடுக்கப்படவில்லையா?

சரடுகள் மூலம் வெற்றிகரமான திசைதிருப்பல்

சீத்தாராம் யெச்சூரி: வாழ்வாதாரப் பிரச்சனைகள் இருக்கின்றன. புல்வாமா வில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குத லுக்கு முன்பு, அரசாங்கம் மக்களின் வாழ்வா தாரப்பிரச்சனைகள் குறித்துத்தான் சரடுவிட்டுக் கொண்டிருந்தது. புல்வாமா தாக்குதல் மற்றும் பாலக்கோடில் இந்திய விமானப்படையினரின் வான்வழியே குண்டுவீசித் தாக்குதல்கள் தொடுத்ததற்குப்பின்னர், பாஜகவும் ஆர்எஸ் எஸ்-உம் தங்கள் சரடுகளை மிகவும் வெற்றி கரமான முறையில் இவற்றுக்குத் திசை திருப்பி விட்டன. இப்போது இவர்கள் விட்ட சரடுகள், அவர்கள் ஏற்கனவே பயங்கரவாதத்திற்கு எதிராக செய்துவந்த பிரச்சாரத்துடன் மிகவும் சரியாகப் பொருந்தின.  புல்வாமா தாக்குதலுக்கு முன்பு பயங்கர வாதத்திற்கு எதிராக இவர்கள் மேற்கொண்டி ருந்த பிரச்சாரம் மக்களை பெரிய அளவிற்கு ஈர்த்திடவில்லை. ஏனெனில் பயங்கரவா தத்தினை சமாளிப்பதில் மோடி அரசாங்கம் படுதோல்வி அடைந்துள்ளது என்றே எதார்த்த நிலைமைகள் காட்டின. ஆயினும் பிரச்சா ரத்தைத் தொடர்ந்தார்கள். புல்வாமா மற்றும் பாலக்கோடு சம்பவங்களுக்குப்பின்னர், பாஜக, தங்களால் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்த்திட முடியும் என்று சரடுவிடத் தொடங்கி விட்டது. இதனைத்தொடர்ந்து தேசிய வெறியை (nationalistic jingoism)  மக்கள் மத்தியில் ஊட்டும்விதத்தில் பிரச்சாரத்தைக் கட்டி எழுப்பினார்கள். 

இத்தகைய தேசிய வெறிப் பிரச்சா ரத்தை இவர்கள் இதற்கு முன், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிகாத் காதல், கலாச்சாரக் காவலர்கள், தாய் வீட்டிற்குத் திரும்பு வோம் (ghar wapsi) என்ற பெயர்களில் மேற்கொண்டு வந்த மதவெறிப் பிரச்சாரங்க ளுடன் பிணைத்தார்கள்.  இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவினை உண்டாக்கும்விதத்தில் இவர்கள் மேற்கொண்டு வந்த மதவெறிப் பிரச்சாரம், இத்தகைய தேசிய வெறிப் பிரச்சாரத்துடன் பிணைக்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்து, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.   

கிசான் யோசனாவும் நியாய் திட்டமும்

பாஜகவிற்குச் சரியான மாற்றை முன்வைக்க முடியாமல் போனதற்கும் இதற்கும் ஏதேனும் 
சம்பந்தம் உண்டா?

சீத்தாராம் யெச்சூரி: புல்வாமா நிகழ்வுக்கு முன்னர், இடதுசாரிகள் எழுப்பிவந்த மக்களின் பிரச்சனைகளை பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுமே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. நாங்கள், விவசாய நெருக்கடி யையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் முன்னணிக்குக் கொண்டுவந்தோம். இவற்றைத் தீர்த்திட கூட்டுறவு சங்கங்களை அமைத்திட வேண்டும் என்று ஆலோசனை களை அளித்தோம். இதனை அனைத்து அரசியல் கட்சிகளுமே குறிப்பிட்டன. இடதுசாரி கள் எழுப்பிய பிரச்சனைகளின் விளைவா கத்தான் மோடியின் கிசான் யோஜனா திட்டமும், காங்கிரஸ் கட்சியின் ‘நியாய்’ திட்டமும் அறிவிக்கப்பட்டன. ஆனால், புல்வாமாவிற்குப் பின்னர், தங்களிடமிருந்த பண பலத்தை வைத்து, அவர்கள் மோடியின் மாபெரும் சித்திரத்தை கட்டி எழுப்பினார்கள். இந்தத் தேர்தலில் ஏற் பட்டுள்ள  மொத்த செலவினத்தில் 50 சதவீதம் அளவிற்கு பாஜக மட்டும் செலவிட்டிருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தீர்வல்ல என தெரிந்தே...

2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் இப்போதைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? தங்களுடைய பிரச்சனைகளுக்கு பாஜக-தான் தீர்வு என்று மக்கள் பார்க்கிறார்களா?

சீத்தாராம் யெச்சூரி: இல்லை. தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இதனால் தீர்வு அளித்திட முடியாது என்று நன்கு தெரிந்தே தான் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்திருக்கி றார்கள்.  இந்தப் பிரச்சனைகளுக்கு காரணமே பாஜக-தான் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், தேர்தல் சமயத்தில், ஒரு முஸ்லீம் பாகிஸ்தானுக்கும் ஓர் இந்து இந்தியாவுக்கும் இடையேயான சண்டை என்று தேசிய வெறியின் அடிப்படையில்  அவர்கள் பிரச்சா ரத்தில் ஈடுபட்டார்கள். அது நாட்டில் பிளவினை ஏற்படுத்திட உதவியது. பாஜக அளித்திட்ட எந்தவொரு உறுதிமொழியையும் அது நிறை வேற்றிடவில்லை.

மிகவும் ஆபத்தானது
 

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: இப்போது மிகவும் நெருக்கடியான கட்டம். கடந்த ஐந்தாண்டுக ளில், பாஜக, பல முக்கியமான சட்டமுன்வடிவுகள் தொடர்பாக, மாநிலங்களவையில் அவை நிறை வேறாது என்ற காரணத்தினால், மாநிலங்கள வையை ஓரங்கட்டுவதற்கான பல்வேறு தில்லுமுல்லு வழிகளைக் கையாண்டது.  நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்வதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையையே வெட்டிச் சுருக்கியது. தொடக்கத்திலிருந்தே, அர சமைப்புச்சட்டத்தின் நிறுவனங்களின் அதிகா ரங்களை அரித்துவீழ்த்துவதற்கான முயற்சிக ளில் ஈடுபட்டது. இது மிகவும் ஆபத்தானது. ஆர்எஸ்எஸ், இப்போதைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்கள் குறிக்கோ ளான இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கு விரும்பு கிறது.

குரல் கொடுப்போம்! 
அணி திரட்டுவோம்!

தற்போது நாடாளுமன்றத்தில் தங்களின்  பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பங்கு 
என்னவாக இருக்கும்?

 

சீத்தாராம் யெச்சூரி: ஓர் உறுப்பினராக இருந்தால்கூட, தற்போது நாடு எதிர்நோக்கி யுள்ள உடனடியாகக் கவனிக்கவேண்டிய நான்கு முக்கியமான சவால்களுக்கு எதிராக  எங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திடும். முதலாவது, நேரடியாகவே இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கும் இந்துத்துவாவிற்கும் இடையேயானது. இதுதொடர்பாக அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொன்றையும் எதிர்த்திடு வோம். இரண்டாவதாக, அனைத்து அரச மைப்புச்சட்ட நிறுவனங்களையும் பாதுகாத்திடு வோம். மூன்றாவதாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சீர்திருத்தங்களும் அதன் காரணமாக மக்கள் மீதான தாக்குதல்களும் அதி கரித்திடும். இதனை நாங்கள் எதிர்த்திடுவோம். நான்காவதாக, இவர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும். அனைத்து மாற்றுக் கருத்துக்களும் கருணை யேதுமின்றி நசுக்கப்படும். எங்கள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் இந்த நான்கு பிரச்சனை கள் மீது குரல் எழுப்புவதோடு மட்டும் நின்றுவிட மாட்டார்கள், மாறாக, இவற்றின்மீது தாங்கள் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு மற்றவர்க ளையும் அணிதிரட்டுவார்கள்.

2016- போல் புரிந்துணர்வு ஏற்படவில்லை

மேற்கு வங்கத்தில், உங்கள் முன்னணி ஊழியர்களே பாஜகவிற்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றனவே…!

சீத்தாராம் யெச்சூரி: இதுபோன்றதொரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. எங்கள் வேட்பாளருக்கு எதிராக  வேலைசெய்த ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியிருக்கிறோம். இது ஒன்றுதான் தெளிவாகத் தெரியக்கூடிய புகார். மேற்கு வங்கத்தில்,  திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உணர்வு நிலவுகிறது. 2016இல் பாஜகவின் வாக்கு சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. இதற்குக் கார ணம், அப்போது இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு இருந்தது. இந்தத்தடவை, அத்தகைய புரிந்து ணர்வை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கான காரணங்கள் அவர்களுக் குத்தான் வெளிச்சம்.  நான்கு முனை போட்டி என்று வரும்போது, திரிணாமுல் காங்கிரசை முறியடித்திட பாஜகவாகத்தான் இருக்கமுடியும் என்று மக்கள் நினைத்தார்கள். மேலும், திரிணா முல் காங்கிரசின் அராஜக நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்ல விரும்பினார்கள். இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

இடதுசாரிகள் மட்டுமே

பலர் இடதுசாரிகளுக்கு இரங்கல் செய்திகள்  எழுதிக் கொண்டிருக்கிறார்களே!  இடதுசாரிகளின் எதிர்காலம் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இதுபோன்ற இரங்கல் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன? நாங்கள் உயிருடன் இருக்கிறோம். நிச்சயம் நாங்கள் பதிலடி கொடுப்போம். இப்போது நடைபெற்ற தேர்தலில் நாட்டில் வலதுசாரி அரசியல் ஒருமுகப்படுத்தப்பட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. இதற்கு இயற்கை யாகவே எதிர்ப்பு என்பது இடதுசாரி அரசியல் தான். இடதுசாரிகள் மட்டுமே வலதுசாரிகளை தத்துவார்த்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் எதிர்க்கக்கூடிய அளவிற்கு எவ்விதப் பிசிறுமின்றி உறுதியுடன் இருக்கி றார்கள். இப்பங்களிப்பினை இடதுசாரிகள் மேற்கொள்வாரகள். நாங்கள் எங்கள் அமைப்பினை ஒழுங்கு படுத்துவோம். ஆகஸ்ட் இறுதிக்குள் எங்கள் கட்சி யின் மாநிலக் குழுக்கள் அனைத்தும் 2015இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் பிளீனத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்தாபன மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்திடும். அவற்றின் அடிப்படையில், நாங்கள் எங்கள் எதிர்கால செயல்பாடுகள், ஸ்தாபனம், பிரச்சாரம், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகிய அனைத்தின் பாணியையும் மறுஆய்வு செய்திடு வோம். அதன்பின்னர், இவற்றின் அடிப்படை யில், நாங்கள் மீண்டு வருவோம். மக்களிடம் செல்வோம். அவர்களிடமிருந்து கற்போம். நாங்கள் இதர கட்சியினரையும் சந்திப்போம். அப்போதுதான் இடதுசாரிகள் மத்தியில் பெரிய அளவில் ஒருங்கிணைப்பு உருவாகும்.

தமிழில்: ச.வீரமணி